Ads Area

சம்மாந்துறை கோரக்கோயில் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த பாற்குடபவனி.

காரைதீவு சகா.

சம்மாந்துறை கோரக்கோயில் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு உற்சவத்தின் ஓரங்கமான பாற்குடபவனி மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆலய தலைமை பூசகர் மு.ஜெகநாதன் மற்றும் பூசகர் எஸ்.சின்னத்தம்பி தலைமையில் இன்றைய தினம் பாற்குடபவனி இடம்பெற்றுள்ளது.

ஆலயபரிபாலன சபைத்தலைவர் ம.பாலசுப்பிரமணியம், செயலாளர் த.அழகுராஜா, பொருளாளர் எஸ்.சசிகரன் மற்றும் உபயகாரர் தவிசாளர் கி.ஜெயசிறில் பங்கேற்புடன் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாற்குடபவனி சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடபவனியின் விசேட பூஜையுடன் ஆரம்பமாகியது. மேலும் விசேட பூஜை இடம்பெற்றதோடு, எதிர்வரும் 10ஆம் திகதி அம்மனின் உள்வீதி உலாவும், 12ஆம் திகதி வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe