Ads Area

பா.உ. மன்சூருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டு சம்மாந்துறை மண் கெளரவப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அமைச்சுப் பதவியொன்றை சம்மாந்துறைக்கு வழங்க முன் வர வேண்டுமென நாபீர் பவுண்டேசனின் ஸ்தாபகர் நாபீர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கல்முனை தொகுதிக்கும் பொத்துவில் தொகுதிக்கும் அமைச்சு பதவிகளை வழங்கி அழகு பார்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச் சந்தர்ப்பத்தில் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்மாந்துறைக்கு வழங்க வேண்டும். 

அதிலும் குறிப்பாக சிறந்த ஆளுமை மிக்க சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுப்பவர். எனவே அவருக்குரிய அமைச்சு அதிகாரத்தை வழங்க அமைச்சர் ரஊப் ஹக்கீம் முன் வரவேண்டும் எனவும் நாபீர் குறிப்பிட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe