Ads Area

கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இதுவரையில் 220 பாலியல் தொழில் மையங்கள் சுற்றி வளைப்பு.

கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இதுவரையில் நாடு முழுவதிலும் இயங்கி வந்த 220 பாலியல் தொழில் மையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

பாலியல் தொழில் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள், முகாமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

பெஹலியகொட, மினுவன்கொட, வெலிசற, நிட்டம்புவ, கொச்சிகடே, நீர்கொழும்பு, பியகம, சபுகஸ்கந்த, கிரிபத்கொட, கடவத்த, வத்தளை, சீதுவ, ஜாஎல, பஸ்யால ஆகிய பிரதேசங்களில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனுராதபுரம், அவிசாவளை, அம்பிலிபிட்டிய, நுவரெலியா, திருகோணமலை, பொலனறுவை, காலி, கொழும்பு, ரத்தினபுரி, யடியாந்தொட்டை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe