அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று (16) மலை முதல் மழை பெய்து வருகின்றது.
அம்பறையில் கடந்த பல மாதங்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் திடீரென மழை பெய்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால் விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிர்ச் செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நீர்நிலைகள் வற்றி வரண்டு காணப்பட்டன. குடிநீருக்காக சில பிரதேச மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தனர்.
கால்நடைகள் நீரின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தன. போதிய மழை வீழ்ச்சி மற்றும் நீர் நிலைகளில் போதிய நீர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கையை இம்மாவட்ட மக்கள் கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

