Ads Area

காணாமல் போயுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏறாவூர் தௌபீக் அவர்களை கண்டு பிடிக்க உதவுங்கள்.

கண்டுபிடிக்க உதவுங்கள்

அன்பின் உறவுகளே,

ஏறாவூர், ஓட்டுப்பள்ளிகுறுக்கு வீதியில் வசிக்கும்  ஓய்வு பெற்ற ஆசிரியர் தௌபீக் அவர்கள், தனது உறவினரோடு கண் சிகிச்சைக்காக கொழும்பு சென்று, இன்று காலை 10.00 மணியளவில் கதுறுவல பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, கலேவலையில் வைத்து பகல் சாப்பாட்டுக்காக பஸ் நிறுத்திய போது, ஆசனத்தில் இருந்து வந்த தௌபீக் சேரை காணவில்லை.

எங்கு வைத்து இறங்கியிருப்பார் எனத் தெரியாது.

கலேவலைக்கு வருவதற்கு முன் அரை மணிநேரம் முன்பாக அவர் இருக்கையில் இருப்பதை உறவினர் அவதானித்திருக்கிறார். இதனை வைத்து பார்க்கும்போது பெரும்பாலும் குருனாகல், மெல்சிறிபுர, கொக்கரல்ல போன்ற பகுதிகளில் சுயநினைவற்று இறங்கியிருக்கலாம்.

தயவுசெய்து இப்பதிவினை அதிகமாக பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்.

0773485525 ஏறாவூர் நஸீர்

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe