Ads Area

பிக்பாஸ் BIG BOSS கவின் அம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியல் பங்கு பற்றிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுல் ஒருவரான கவிராஜன் என்கிற கவின். இவருக்கு சொந்தவூர் திருச்சி கே.கே.நகர் பகுதி. 

கவின் அம்மா ராஜலெட்சுமி என்கிற ராஜி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயேந்தி, ராணி, ஆகியோர் கூட்டாக ஏல சீட்டு நடத்தியிருக்கிறார்கள். ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 2007ம் ஆண்டு 29 பேர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். 

 மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில்,  நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமையில் 35 பேரை விசாரணை செய்து இன்று தீர்ப்பு வழங்கினார். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருணகிரி, சொர்ணநாதன் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டார்கள். மீதம் இருக்கும் தமேயந்தி, ராஜலெட்சுமி, ராணி ஆகிய மூவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா 1 இலட்சம் கொடுக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து 7 . 5 சதவீத வட்டியுடன் மொத்தம் சேர்ந்து 55 இலட்சத்து 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இந்த பணத்தை கட்ட தவறினால் 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe