காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
ஒருநாள் அவர் `பட்ஸ்' பயன்படுத்தியபோது அதில் ரத்தம் படிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, மீண்டும் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார். காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையைச் செய்யச் சொன்னதுடன் காது, மூக்கு, தொண்டை நிபுணருக்குப் பரிந்துரைத்தார் அந்த மருத்துவர்.
காது, மூக்கு, தொண்டை நிபுணர் `சி.டி ஸ்கேன்' எடுக்கும்படி சொல்ல, அதன் முடிவில்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக `பட்ஸ்' பயன்படுத்தியதால் அவரது காதில் பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டு, அது காதுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டை அரித்திருக்கிறது.
`காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. காதுகளைச் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்தான் பாதுகாப்பானது என்கிற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் காட்டன் பட்ஸை காதுக்குள் செலுத்தக்கூடாது என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை'
ஆஸ்திரேலிய மருத்துவர்கள்
சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது நோய்த்தொற்று திசுக்கள் அகற்றப்பட்டு, காது துவாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. `காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. காதுகளைச் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்தான் பாதுகாப்பானது என்கிற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் காட்டன் பட்ஸை காதுக்குள் செலுத்தக் கூடாது என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை' என்று அறிவுறுத்தினர் மருத்துவர்கள்.