ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பொதுவேட்பாளர் களமிறங்குவது முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கும் விடயமாகும்.
எந்தவொரு தீர்மானமாக இருப்பினும் அது உணர்ச்சிவசப்பட்டமன்றி, அறிபூர்வமாக எடுக்கப்பட வேண்டும். என மன்சூர் எம்.பி. தெரிவிப்பு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பொது வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா போட்டியிடுவது முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கின்ற காரியமாகும் என்பதுடன், பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள். என லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பொது வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா போட்டியிடுவது முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுக்கின்ற காரியமாகும் என்பதுடன், பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள். என லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நேற்று (24) நேத்ரா தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா அவர்களின் வரலாறு, அவரின் அரசியல் தீர்மானங்கள், அரசியல் நகர்வுகள் என்பனவற்றை எடுத்துப் பார்க்கும் போது அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவும், சுயநல அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுகின்றார்.
இந்நாட்டில் ஏறக்குறைய 30 வீதமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், மலாயர் என்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகள் பிரதானமாக நோக்கப்படுகின்றன. இதனை தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளோரின் கருத்துக்களிலிருந்து அதானிக்க முடிகின்றது.
இருப்பினும் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களினால் ஒருவராலும் ஜனாதிபதியாக வெற்றி பெறமுடியாதுடன், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப்போட்டியிட்டால், பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் இன்னும் தூரமாகி விடுவார்கள்.
ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தன்னை ஒரு வேட்பாளராக போட்டியிடுவதன் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி எவராக இருந்தாலும் தெரிவு விடயத்தில் முஸ்லிம் சமூகம் ஆதரவு அளிக்கவில்லை என்ற ஆதங்கம் காணப்படும். இது முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கின்ற காரியமாகப் பார்க்கப்படும். இதனை முஸ்லிம் சமூகம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவை அறிவிக்கப்பட்டுள்ள எந்த ஜனாபதிபதி வேட்பாளர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதற்காக அவரை தேடி பேரம் பேசும் நடவடிக்கையாகவும் இந்த அறிவிப்பு இருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸினைப் பொறுத்த வரை அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பகிரங்கப்படுத்த முடியும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரினதும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் விஞ்ஞானத்தை கட்சிக்குள் ஆராய வேண்டும். அதன் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்வதென்பதைத் தீர்மானிப்போம்.
முஸ்லிம் காங்கிரஸ் எவருக்கும் கடமைப்பட்ட கட்சியல்ல. முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு, கலாசார பாதுகாப்பிற்கு, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு யார் உத்தரவாதம் தருகின்றார்களோ அவருக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கும்.
எனவே, எந்தவொரு தீர்மானமாக இருப்பினும் அது உணர்ச்சிவசப்பட்டமன்றி, அறிபூர்வமாக எடுக்கப்பட வேண்டும். கடந்த கால அனுபவங்கள், எதிர்கால சவால்களை முன்னிறுத்தியதாக அந்தத் தீர்மானங்கள் அமைய வேண்டும். என்றார்.