சம்மாந்துறைக்கும், திருகோணமலைக்கும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவேண்டும்; நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் யூ.கே.நாபீர்
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் பிரதி அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் குறித்த பதவிகளானது சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு வழங்குவது குறித்து கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும், சமூக செயற்பாட்டாளருமான அல்ஹாஜ். யூகே.நாபீர் வியூகம் செய்திகள் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
மு.கா.பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர் மற்றும் தௌபீக் ஆகியோர் மக்கள் சேவையில் வினைத்திறனுடன் செயலாற்றி வருகின்ற திறமைமிக்க அரசியல்வாதிகளாக பரிணமித்து வருகின்றனர். எனவே, மக்கள் பணியில் துடிப்புடன் களமிறங்கி இருக்கும் இரு உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டியது தார்மீக பொறுப்பாகும் என்றார்.