Ads Area

ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளுக்கு இடையூறு! கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்தர முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்துசெல்ல பரீட்சைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளபோதும் சொந்த விருப்பு, வெறுப்புக்களுக்காக மாணவியரைத் தடுக்கும் நபர்களுக்கு எதிராக கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 

உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில், சில பரீட்சை நிலையங்களில் ஹிஜாப் அணிந்துசென்ற முஸ்லிம் மாணவியர் ஹிஜாபுடன் பரீட்சை மண்டபங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவியர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe