Ads Area

ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் வேட்­பாளர் ஒருவர் தனித்து கள­மி­றங்­கு­வது தேவை­யற்ற விட­யம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தனித்து கள­மி­றங்­கு­வது முஸ்­லிம் சமூ­கத்தை வெகு­வாக பாதிக்கும்: அதா­வுல்லா, சுபைர் கண்­டனம்

ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் வேட்­பாளர் ஒருவர் தனித்து கள­மி­றங்­கு­வது தேவை­யற்ற விட­ய­மென்று தேசிய காங்­கி ரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம். அதா­வுல்லா தெரி­வித்­துள்ளார். மர்ஹும் அஷ்­ரபின் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­று­முன்­தினம் ஏறா­வூரில் இடம்­பெற்ற போது நினைவுப் பேருரை ஆற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த அவர்,

"ஹிஸ்­புல்­லாவின் இந்த முன்­னெ­டுப்­பா­னது எவ­ரு­டைய யோசனை என்று எனக்கு விளங்­க­வில்லை". நாங்கள் அழிந்­தது போதும் என்­பதை அவ­ருக்குச் சொல்ல விழை­கின்றேன். டாக்டர் இலியாஸ், ரசூல் போன்­ற­வர்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அது ஒரு ஜோக்­காக கரு­தப்­பட்­டது.

அதேபோன்று ஜோக்­க­டிக்கும் நேர­மல்ல இது. உங்­களை, நீங்கள் குறைத்­துக்­கொள்ள வேண்டாம். முஸ்லிம் சமூகம் பேரம் பேசும் சக்­தியை வைத்து தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­கின்­றது என்று சிங்­கள இன­வா­திகள் ஏற்­க­னவே குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு நமது வண்­ட­வா­ளங்­களை வெளிக்­காட்ட வேண்­டுமா? நமக்கு எதி­ராக இருக்கும் இனத் துவே­ஷத்தை இன்னும் அதி­க­ரிக்க வேண்­டுமா? எனவே இறை­வனை நாம் பயந்து கொள்ள வேண்டும் என் றார்.


இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி மட்­டக்­க­ளப்பு மாவட்ட அமைப்­பா­ரு­மான சுபைர் கூறி­ய­தா­வது,

மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் தலைமை எனக் கூறிக்­கொள்ளும் ஹிஸ்­புல்லாஹ், முஸ்லிம் மக்கள் சார்­பாக வேட்­பா­ள­ரை இறக்­கு­வதன் மூலம் சமூக உரி­மை­களை வென்றுகொள்ள முடியும், பேரம் பேச முடியு­மெனக் கூறி வரு­கிறார். அவர் அனைத்து முஸ்லிம் கட்­சி­க­ளையும் ஒன்று சேர்த்து சமூ­கத்­துக்­கான பேரம் பேசலை சரி­யாக செய்­து­கொள்­வதை விடுத்து இவ்­வா­றான முயற்­சிகள் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

ஏற்­க­னவே நமது பொரு­ளா­தாரம் கேள்­விக்­கு­றி­யாகி உள்ள நிலையில் இன்னும் சமூகம் நசுக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழ்நிலை­களை உரு­வாக்கக் கூடாது. வேறு மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்­களை இவ்­வா­றான முயற்­சிகள் பெரு­ம­ளவு பாதிக்கும். அவர்­களை வீணான சிக்­க­லுக்குள் தள்ளும்.

மர்ஹும் அஷ்ரப் கடந்த காலங்களில் அப்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்தே ஜனாதி பதித் தேர்தலில் சமூகத்தை வழிநடத் தினார். அவர் ஒரு போதும் இவ்வாறான தனித்த முயற்சிகளை முன்னெடுத்தது மில்லை என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe