ஜனாதிபதித் தேர்தலில் தனித்து களமிறங்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும்: அதாவுல்லா, சுபைர் கண்டனம்
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் தனித்து களமிறங்குவது தேவையற்ற விடயமென்று தேசிய காங்கி ரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். மர்ஹும் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஏறாவூரில் இடம்பெற்ற போது நினைவுப் பேருரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதேபோன்று ஜோக்கடிக்கும் நேரமல்ல இது. உங்களை, நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டாம். முஸ்லிம் சமூகம் பேரம் பேசும் சக்தியை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது என்று சிங்கள இனவாதிகள் ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நமது வண்டவாளங்களை வெளிக்காட்ட வேண்டுமா? நமக்கு எதிராக இருக்கும் இனத் துவேஷத்தை இன்னும் அதிகரிக்க வேண்டுமா? எனவே இறைவனை நாம் பயந்து கொள்ள வேண்டும் என் றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாருமான சுபைர் கூறியதாவது,
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தலைமை எனக் கூறிக்கொள்ளும் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் மக்கள் சார்பாக வேட்பாளரை இறக்குவதன் மூலம் சமூக உரிமைகளை வென்றுகொள்ள முடியும், பேரம் பேச முடியுமெனக் கூறி வருகிறார். அவர் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் ஒன்று சேர்த்து சமூகத்துக்கான பேரம் பேசலை சரியாக செய்துகொள்வதை விடுத்து இவ்வாறான முயற்சிகள் ஆரோக்கியமானதல்ல.
மர்ஹும் அஷ்ரப் கடந்த காலங்களில் அப்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்தே ஜனாதி பதித் தேர்தலில் சமூகத்தை வழிநடத் தினார். அவர் ஒரு போதும் இவ்வாறான தனித்த முயற்சிகளை முன்னெடுத்தது மில்லை என்றார்.