Ads Area

சம்மாந்துறையில் யானைகளின் அட்டகாசம், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறி.

தகவல் - இப்றாஹீம் டக்கீத்

சம்மாந்துறை கல்லரிச்சல்-1ம் பிரிவில் சலாம் ஜும்மாப் பள்ளி முன்னால் உள்ள பகுதியில் 2019/08/31ம் திகதி உள் நுளைந்த காட்டு யானை கடை உட்பட பல வளவுகளின் மதில்கள் என்பவற்றை உடைத்து நெல் மூட்டை பயிர்கள் என்பவற்றையும் சேதமாக்கி சென்றுள்ளது.

இப் பகுதிக்கு தொடர்ச்சியாக யானைகள் வந்து சேதப் படுத்துவதால் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

சென்ற வாரம் நிந்தவூரைச் சேர்ந்த 13 வயது சிறுவனை யானை தாக்கி அவர் மரணமடைந்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe