ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியவேளை மலேசிய பிரதமர் மஹாதீர் முகமட் இந்தியா காஸ்மீரை ஆக்கிரமித்தது என பொருள்பட கருத்து வெளியிட்டமைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஐநாவில் உரையாற்றிய மாஹாதீர் முகமட் ஐநா தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் காஸ்மீர் படையெடுப்பிற்கு உள்ளாகியுள்ளது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைக்கு சில காரணங்கள் நோக்கங்கள் இருக்கலாம் எவ்வாறாயினும் இது பிழையான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபடுவதை தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் அவர் சாடியுள்ளார்.
சில நாட்களிற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தார்.
மலேசிய பிரதமரின் கருத்திற்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்திய அரசாங்கம் பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளனர்.