Ads Area

காஸ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது மஹாதீர் முகமட் ஐநாவில் உரை.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியவேளை மலேசிய பிரதமர் மஹாதீர் முகமட் இந்தியா காஸ்மீரை ஆக்கிரமித்தது என பொருள்பட கருத்து வெளியிட்டமைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள்  கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஐநாவில் உரையாற்றிய  மாஹாதீர் முகமட் ஐநா தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் காஸ்மீர் படையெடுப்பிற்கு உள்ளாகியுள்ளது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைக்கு சில காரணங்கள் நோக்கங்கள் இருக்கலாம் எவ்வாறாயினும் இது பிழையான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபடுவதை தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் அவர் சாடியுள்ளார்.

சர்வதேச தடைகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.இந்த தடைகளை விதிப்பது செல்வந்த வறிய நாடுகளுக்கு மாத்திரம் உள்ள விசேட அந்தஸ்த்தாக காணப்படுகின்றது ஒரு நாட்டிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படும்போது பல நாடுகள் அதனால் பாதிக்கப்படுகின்றன ஈரானிற்கு எதிரான தடையால் மலேசியா பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தார்.

மலேசிய பிரதமரின் கருத்திற்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்திய அரசாங்கம் பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பலர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe