Ads Area

கடவுச் சீட்டு விவகாரம் - கூடிய விரைவில், கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நேற்று (29.09.2019) நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜிதா சேனாரத்ன, இலங்கைக்கான உரிய கடவுச்சீட்டு கோட்டாபயவிடம் இல்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாகவும், 2 தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் குற்றஞ்காட்டியுள்ளார். மேலும், இவற்றை மறைக்கும் முகமாக செயற்பட்டுள்ளார்கள் அதனால் திங்கட்கிழமை எமது வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்வார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe