பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தில், ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று(24.09.2019) நிதி உதவியினை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த திருமதி முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி உதவியை வழங்கி வைத்துள்ளார்.
அத்தோடு, ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம்.துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்ச ரூபாய் நிதி உதவியும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.