Ads Area

அரச உத்தியோகத்தர்கள் வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் 3 வருட சிறை.

அரச உத்தியோகத்தர்கள் வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் 3 வருட சிறை.

தபால்மூலம் வாக்களிக்கும் அரச உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் அவர்கள் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது. இன்று ஆரம்பித்த தபால்மூல வாக்களிப்பின்போது, பல அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe