சுர்ஜித் எவ்வாறு இறந்தான்..?? உணவு, நீர் இன்றி ஆழ்குழியில் ஒரு குழந்தை எவ்வளவு காலம் உயிர் பிளைக்கும்?
அண்மையில் தமிழ் நாட்டில் சுஜித் என்ற சிறுவன் அவனது வீட்டின் அருகில் தோண்டப்பட்ட பாவனையில் இல்லாத ஆழ் துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவிக்கொண்டான். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு மரணம் ஏற்படுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.
அவை யாவன
வயது – சிலர் நினைப்பர் மனிதன் ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் அவனுக்கு உணவோ அல்லது சக்தியோ தேவைப்படாது என்று. இது தவறானது. சாதாரணமாக சுவாசம், கலங்களின் செயற்பாடு… போன்றவற்றிக்கு குறிதளவு சக்தி தேவை (Basal metabolic rate (BMR) is the rate of energy expenditure per unit time by endothermic animals at rest). சிறுவன் ஒருவனுக்கு ஒருநாளைக்கு வயது வந்தவர்களுக்கு தேவைப்படும் சக்தியில் அதிகம் தேவை.
முன்னைய உடல் நிலை பட்டினிக்கு முன்னர் ஒருவர் மிக சிறந்த உடல் நிலையினை கொண்டிருப்பராயின் அவரினால் அதிகளவு காலத்திற்கு பட்டினியை தாங்கிக் கொள்ள முடியும்.
சூழல் வெப்பநிலை பட்டினி சாவினை எதிர் நோக்கி இருக்கும் ஒருவர் இருக்கும் சூழலின் வெப்பநிலையானது அவரின் உடல் வெப்பநிலையினை விட கூடவாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர் பட்டினியை அதிக காலம் தாங்க முடியாது. பொதுவாக ஆழ் துளை கிணறுகளில் அதிக வெப்பம் (Hyperthermia) நிலவும்.
சிறுவன் சுஜித் சம்பவத்தில் மேற்குறித்த காரணிகள் எல்லாம் தப்பி உயிர் வாழ்வதற்கு பாதகமாகவே இருந்தன என்பது குறிபபிடத்தக்கதாகும். சிறுவன் சுஜித் சம்பவத்தில் இன்னோர் முக்கிய காரணி பாதகமாக அமைந்தது அது என்ன?
நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .
இங்கு சிறுவன் நாட்கள் செல்ல செல்ல மேலும் கீழே கீழே சென்று இறுக்கமாக மாட்டிக்கொண்டான் . இதன் பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். இவ்வாறு மிக இறுக்கமான இடங்களில் இருக்கும் நபர்களுக்கு குழாய் மூலம் ஒட்சிசன் கொடுத்தாலும் பெரிய பிரயோசனம் ஒன்றும் நிகழப்போவதில்லை. ஏனெனில் கொடுக்கும் ஒட்சிசனானது வினைத்திறன் மிக்க முறையில் நுரையீரல் லினை அடையாது. சாதாரண ஓர் மனிதனுக்கு 3 -5 நிமிடங்களுக்கு மூளைக்கு தேவையான ஓட்சிசன் கிடைக்காவிடில் கூட இறப்பது ஏற்படும் நிலையில். சிறுவன் சுஜித்தின் நிலை சொல்லி விளங்கவேண்டியதில்லை.
கீழே உள்ள 2வது படம் ஆனது traumatic asphyxial death நடைபெற்ற நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இறுதியாக இனிவரும் காலங்களில் இவ்வாறன அநியாய இறப்புகளை தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.


