ஆசியா நாடுகளில் மிக உயர்ந்த கோபுரம் இலங்கையில் இருப்பது நமக்கு எப்படி ஆச்சரியமும் பெருமையுமோ அதே போல் ஆச்சரியமும் சிறுமையும் ஏற்படுத்தும் ஒரு தகவல்தான் இது.
இலங்கையில் பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடையிலான எல்லைக் கிராமத்து மக்கள் இவ்வாறுதான் தினமும் வளவை கங்கையைக் கடந்து பாடசாலைக்கும், வைத்தியசாலைக்கும், ஏனைய பணிகளுக்கும் சென்று வருகிறார்கள்.
ஆசியாவை ஆச்சரியப்படுத்தும் தாமரைக் கோபுரத்தை கட்டியவர்களுக்கு இது போன்ற மக்களின் அன்றாட அத்தியவாசியப் பிரச்சினைகள் மறந்து விடுவதேனோ...???
இவர்களது கிராமத்துக்கு குருக்கே வளவை கங்கை ஆறு ஓடுகிறது, இந்த கங்கையை கடந்தே கிராமவாசிகள் பாடசாலைக்கும், வைத்தியசாலைக்கும், நகரங்களுக்கும் ஏனைய இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்.
கங்கையை கடப்பதற்காகவே இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு கயிற்றினால் கட்டி அதில் தொங்கி சறுக்கியபடி செல்கின்றார்கள் அக்கிராம்வாசிகள். பல மைல் தூரம் நடந்து சென்றே தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், கல்வியில் மிகவும் பின் தங்கிய ஓர் கிராமம் என்பது குறிப்பிட்டுசொல்லவேண்டும்.
நாடு முழுவதும் அனைத்து தெருக்களையும் அபிவிருத்தி செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் தற்கால அரசியல்வாதிகளின் பார்வைக்கு இப் புகைப்படங்கள்.