Ads Area

இகாமாவில் குறுாFப் (Huroob) இருப்பவர்கள் சவுதி அரேபியாவுக்கு மீண்டும் நுழைய முடியாது.

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் இகாமாவில் குறுாFப் (Huroob) இருந்தால் அவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு மீண்டும் நுழைய முடியாது என சவுதி அரேபியாவின் ஜவசாத் (Jawazat) அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறுாFப் (Huroob) என்பது சவுதியில் வேலை செய்யும் ஒருவர் தான் வேலை செய்யும் எஜமானிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ அவர்களுக்குத் தெரியாமல், அவர்களுக்கு அறிவிக்காமல் வேறு ஒருவரிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்தால் உடனே குறித்த அந்த எஜமான் அல்லது நிறுவனம் உரியவர் மீது முறைப்பாடு செய்வார்கள் அதனையெ குறுாFப் (Huroob)  என்று சொல்வதுண்டு உரியவரிடம் இருந்து விலகினாலே குறிப்பிட்ட காலத்திற்குல் இக்காவில் குறுாFப் (Huroob) வந்துவிடும்.

இவ்வாறு ஒருவர் குறுாFப் (Huroob) செய்யப்பட்டிருந்தால் அவர் மீண்டும் சவுதிக்குல் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் அத்தோடு அவர் 50 ஆயிரம் தண்டப்பணம் செலுத்த நேரிடுவதோடு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் பெறுவார் என  சவுதி அரேபியாவின் ஜவசாத் (Jawazat) அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே போல், இவ்வாறு குறுாFப் (Huroob) செய்யப்பட்டோருக்கு யாராவது வேலை வாய்ப்புக் கொடுத்தாலோ, அவர்களை தங்களது றுாமில் தங்க வைத்தாலோ, வாகனங்களில் ஏற்றிச் சென்றாலோ அவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் சவுதி அரேபியாவின் ஜவசாத் (Jawazat) அலுவலகம் தெரிவித்துள்ளது.


மேலும் சில நிறுவனங்கள் மற்றும் கபீல்கள் (எஜமான்) வேலையாட்கள் மீது பொய்யான முறையிலும் குறுாFப் (Huroob) செய்வதாகவும் அவ்வாறு பொய்யான முறையில் குறுாFப் (Huroob) செய்தால் குறித்த அந்த நிறுவனம் அல்லது கபீலுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜவசாத் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆகவே...சவுதியில் வேலை செய்யும் இலங்கை-இந்தியா உறவுகளே நீங்கள் நாட்டில் இருந்து வேலைக்கு வந்த நிறுவனத்திடமோ அல்லது கபீலிடமோ இருந்து விலக வேறு ஒரு இடத்தில் வேலை செய்பவர்களாக இருந்தீர்களானால் உடனடிய  ஜவசாத் (Jawazat) அலுவலகத்தை அனுகி தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

செய்தி மூலம் - http://saudigazette.com.sa
தமிழ் - மக்கள் நண்பன் அன்சார்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe