இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சவூதி அரேபிய அரசின் சார்பில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு இரு நாட்டு உறவுகள் பற்றியும் கலந்துரையாடினர்.