கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்த்தன மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண காரியாலயத்தில் இன்று (01) தமது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் உதவி பொலிஸ் மா அதிபராக இருந்த கபில ஜெயசேகர கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஒய்வு பெற்றுச் சென்ற நிலையில் இந்த வெற்றிடத்திற்கு உதவி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க கடமைகளை பெறுப்பேற்ற நிலையில் அவர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த வெற்றிடத்திற்கு உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்த்தன நியமிக்கப்பட்ட நிலையில் அவர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.