கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை.
ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார். இதன்படி 25 ஆயிரம் ரூபா பிணையிலும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.