Ads Area

மட்டக்களப்பு வைத்தியசாலை உயிர் பலி இடமா..?? அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!

மட்டக்களப்பு வைத்தியசாலை உயிர் பலி இடமா..?? அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!

மட்டுபோதனா வைத்திய சாலையில் பிரவசத்திற்காக கடந்த 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து தாயொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஊசி போடப்பட்ட பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று தனக்கு பிரவச வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

ஒரு பிள்ளையின் தாய் என்பதால் அவருக்கு அனுபவமும் இருந்தது. இந்நிலையில் உறங்கிகொண்டிருந்த அந்த தாதி இப்பதானே ஊசி போட்டிருக்கு நேரம் இருக்கு பேசாம போ என ஏனோ தானென்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார். அதன்பின்னர் வார்ட்டுக்கு சென்ற பெண்ணிற்கு மீண்டும் வலி அதிகரிக்க அந்த பெண்ணால் எழும்ப கூட முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த மற்றுமொரு பிரசவத்துக்காக வந்திருந்த பெண் தாதியிடம் சென்று கூற அதன் பின்பே குறித்த தாயை பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஊழியர்கள்.

அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது . அதன் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என கூறிய தாதியர்கள் குழந்தையை வெளியே எடுத்து சென்றுள்ளனர்.

பிள்ளையை எதிர் பார்த்து தாய் காத்துக்கொண்டிருக்க 2மணித்தியாலங்கள் கழித்தும் பிள்ளையை காட்டாடதனால் தாய் குழந்தை தொடர்பில் வினவியபோது பிள்ளை இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறுகின்றார். அத்துடன் பிள்ளையின் நிறையும் 2kg 35g இருந்துள்ளது. இவ்வாறான நிலையில் குழந்தை இறந்ததுக்கான காரணத்தை வினவிய போது பல தரபட்ட காரணங்கள் அங்குள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட காரணத்தை கேட்க ஆச்சரியமாய் இருந்தது. அதாவது குழந்தைக்கு நுரையீரல் இல்லயாம். அப்படியானால்....

அந்த குழந்தை 8மாதத்தில் பிறந்தது எப்படி ? இவ்வளவு தேக ஆரோக்கியமாக பிறந்திருக்கும் ? பலகேள்விகளுக்கு பதில் இல்லை. 

கடந்த 18ம் திகதி அந்த பெண்ணிற்கு சாதுவான வலி ஏற்பட வத்தியசாலை சென்றபோது, அங்கு scan பண்ணிய வைத்தியர் , பிள்ளை ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் சுகபிரவசமாகிவிடும் 20ம் திகதி வைத்தியசாலைக்கு வருமாறும் கூறியுள்ளார். அப்படியிருக்கையில் பெண்ணை பரிசோதித்த வைத்தியருக்கு அந்த குறை தெரியவில்லையா..? அப் பச்சிளங் குழந்தையின் தகப்பனிடம் கூறிய காரணங்களும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் கூறிகின்றார். என்ன செய்வது வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பமாச்சே ஏமாற்றத்தான் செய்வார்கள்.


எத்தனை குழந்தைகள் இந்த வைத்தியசாலையில் இறந்து இருக்கிறார்கள்? இதற்கு தீர்வுதான் என்ன? என மட்டக்களப்பு மக்களப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இப்படி அடிக்கடி குழந்தை இறப்பு வீதம் அதிகரிக்குமாயின் வரும் தமது சந்ததிகளின் நிலமைதான் என்ன? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தாதியர்களின் அசமந்தப்போக்கால் இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாகுமோ? நமது இந்த அவலநிலைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது மட்டக்களப்பு வைத்தியசாலை உயிர்பலி இடமா எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



பிரசவத்தின் போது குழந்தை இறப்பு https://jaffnazone.com

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் அவலம்! https://www.tamilwin.com/community/01/149110




(செய்தி மூலம் - https://www.jvpnews.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe