இந்தியாவை உலுக்கிய பலாத்கார குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.
நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கான தீர்வு மனுவை தாக்கல் செய்வோம் என கூறி உள்ளார்.