எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை -அபுதாபி நீதித்துறை உத்தரவு.
அபுதாபி
எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை திங்களன்று ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.
புதிய உத்தரவு குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அமீனா அல் மஸ்ரூய் கூறும்போது, மக்கள் தங்கள் சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை நாங்கள் எதிர்த்து நிற்கிறோம். அவ்வாறு செய்பவர் குற்றவாளி ஆவார். அவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார் மற்றும் நாட்டின் விதிகளின்படி 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படுவார்.
மேலும் அவர் நீதித்துறை சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனிப்பதாகக் கூறினார்.
மக்கள் சமூக ஊடக தளங்களில் பேசுகிறார்களானால், அவர்கள் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி மீறல் ஏற்பட்டால் குற்றவாளிகள் மதச் சட்டங்களை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்படுவார்கள், அபராதம் விதிக்கப்படுவார்கள்.
சமூக ஊடகங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பலர் இப்போது விருப்பப்படி செய்திகளை அனுப்புகிறார்கள், மேலும் அவர்கள் சிலரின் உணர்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்துகிறோம் என்பதை உணரவில்லை என கூறினார்.
இந்த சட்டம் பின்வருவனவற்றைப் பற்றியது:- எந்தவொரு மதத்தையும் அல்லது அதன் புனிதமான விஷயங்களையும் புண்படுத்துவது, வன்முறையால் மத அனுசரிப்புகள் அல்லது விழாக்களை சீர்குலைத்தல் அல்லது தடுப்பது, எந்த வகையிலும் சிதைப்பது, எந்த புனித நூல்களும், வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள், சின்னங்கள் ஆகியவற்றை அழித்தல் அல்லது தீங்கு செய்தல் ஆகும்.
புதிய சட்டம் ஒரு மதத்தை அவமதித்தல் அதை இழிவுபடுத்துதல் அல்லது வழிபாட்டு தலத்தை அழிக்கும் அனைவருக்கும் பொருந்தும். மசூதி, கோவில், தேவாலயம் அல்லது குருத்வாரா ஆகியவை இதில் அடங்கும்.