(நூருல் ஹுதா உமர்.)
அரசாங்க தகவல் திணைக்களம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அம்பாறை மாவட்ட செயலகக்தில் ஒழுங்கு செய்திருந்த ஒரு நாள் ஊடக செயலமர்வும் அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று (06) காலை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளர் டீ .எம். எல்.பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர்களான வீ . ஜெகதீசன் , சட்டத்தரணி ஏ.எம்.ஏ.லத்தீப் , அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கழுவெவ , லேக் ஹவுஸ் தினமின ஆசிரியர் பீட துமிந்த குரு கே உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அதிகமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.