Ads Area

மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி பிழைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொணர்ந்தனர்.

(நூருல் ஹுதா உமர்.)

அரசாங்க தகவல் திணைக்களம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அம்பாறை மாவட்ட செயலகக்தில்  ஒழுங்கு செய்திருந்த ஒரு நாள் ஊடக செயலமர்வும் அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று (06) காலை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலாளர் டீ .எம். எல்.பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர்களான வீ . ஜெகதீசன் , சட்டத்தரணி ஏ.எம்.ஏ.லத்தீப் , அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கழுவெவ , லேக் ஹவுஸ் தினமின ஆசிரியர் பீட துமிந்த குரு கே உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அதிகமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை அரசாங்க அதிபர், எமது மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது நடைபெற்ற தவறுகளை திருத்திக் கொள்ள ஊடகவியலாலர்களின் பொறுப்புவாய்ந்த  செயற்பாடுகளே காரணம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு வேலையை செய்யும் போது அதில் நடைபெறும் தவறுகளை ஊடகங்களே சுற்றிகாட்டி தவறுகளை திருத்திக் கொள்ள வழியமைக்கிறது.  எமது சேவைகளை மக்கள் மயப்படுத்த் காரணமாக அமைந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe