(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம், நம்பிக்கையாளர் சபை, சனசமூக நிலையங்கள், வர்த்தக சங்கள், சமூக தொண்டர் அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து வேலைத்திட்டதினை முன்னெடுத்தனர்.
இதன்போது டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய குப்பைகள், நீர்தேங்கியுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டதுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதேசங்களில் புகையும் விசுறப்பட்டது.