Ads Area

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் 08 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் 08 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.    

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் ஐக்கிய அமெரிக்க மனிதாபிமான உதவித் திட்டத்தின் இந்து பசுபிக் கொமான்ட் கட்டளைப் பீடத்தின் 08 கோடி நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத் தொகுயினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (20) பாடசாலை அதிபர் ஏ.ஏ. அமீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க இராணுவ பொதுமக்கள் சேவைப் பிரிவின் பணிப்பாளர் பிரதம ஜோசுவா ஆர். டவுன்ஸ், அதிதியாகவும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு கட்டிடத் தொகுதியினை திறந்து வைத்தனர்.


இதில் கிழக்கு மகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe