Ads Area

ஈஸ்டர் தாக்குதல்; கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

பாறுாக் ஷிஹான்.

ஈஸ்டர் தாக்குதல்; கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் அண்மையில் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை, இம்மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe