பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் உட்பட 29பேர் காத்தான்குடியில் கைது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது 29 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (18) சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான 26 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். ஜயரட்ணவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
ரீ.எல். ஜவ்பர்கான் - தினகரன்