பசறை - மடுல்சீமை வீதியில் 06ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த பஸ் இரண்டாக உடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.