Ads Area

72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வு.

இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் ஏற்பாட்டில் சமய நிகழ்வும், விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு.

இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் ஏற்பாட்டில் சமய நிகழ்வும், விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் அமீர் அஷ்ஷேக் கே.எல். ஆதம்பாவா (மதனி) தலைமையில் இன்று சுபஹ் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி முகம்மட் நஸீர், பள்ளிவாசலகள் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எமது முன்னோர்களுக்கும், உயிர்நீத்த படை வீரர்களையும் நினைவு கூறப்பட்டதுடன், இந்நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பிள்ளை போல் வாழ வேண்டும் என பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe