Ads Area

சவுதியில் அதிரடி சோதனை இடம் பெறுகிறது ; இகாமா இல்லாது யாரும் வெளியில் செல்லாதீர்கள்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியால் வேலை செய்வோருக்கான சம்மாந்துறை24 இணையத்தளத்தின் முக்கிய அறிவித்தல்.

சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனைகள் இடம் பெற்று வருகின்றது இச் சோதனை நடவடிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டினர் அதிகமாக புலங்கம் பிரதேசங்களில் சவுதி பொலிஸார் அதிரடியாக களமிறங்கி சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர் ஆள் அடையாளங்களை காண்பிக்கத் தவறும் வெளிநாட்டினரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே...சவுதி அரேபியாவில் எந்த வித உரிய ஆவணங்களும் இல்லாது தங்கியிருப்போர் உங்கள் நாட்டு துாதரகங்களை அனுகி உங்களது பயணம் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் அத்தோடு சட்டரீதியாய தங்கியிருப்போர் உங்களது இகாமா எனும் ஆள் அடையாள அட்டைய தவறாது கையில் வைத்திருங்கள், இகாமா இல்லாது வெளியில் எங்கும் செல்லாதீர்கள்.


பொலிசார் சோதனையில் ஈடுபடும் போது உங்களிடத்தில் இகாமா இல்லாது விட்டால் எந்தவித பாரபட்சமும் இன்றி உங்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள் பிறகுதான் உங்களது நிறுவனத்திற்கு அல்லது கபீலுக்கு அறிவித்தல் வழங்குவார்கள்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe