ஈரான் நாட்டிலிருந்து பஹ்ரைன் ஊடாக வந்த 6 சவுதி அரேபிய பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சவுதிப் பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் படி சவுதி அரசு பஹ்ரைன் அரசிடம் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போது கொரனோ வைரஸ் பாதிப்புக்குள்ளான குறித்த 6 சவுதிப் பெண்களும் பஹ்ரைனில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் ஈரானில் கொரனோ வைரஸின் தாக்கம் அதிகமாவுள்ளதாகவும் இதுவரை அங்கு 19 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இவ் வைரஸ் தாக்கம் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com