Ads Area

மக்கள் காங்ரஸ் முன்னாள் பா.உ. பேராசிரியர் இஸ்மாயில் தேசிய காங்கிரஸில் இணைவு.

அன்சார் காசீம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான பேராசிரியர் எஸ்எம்.எம்.இஸ்மாயில் தனது ஆதரவாளர்களுடனும், சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி சியாமா சியாஸ் ஆகியோர் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா முன்னிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இன்று (09) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இந் நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்எம்.எம்.இஸ்மாயிலின் சம்மாந்துறை அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசியகாங்கிரஸின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெவ்வை, சம்மாந்துறை தேசிய காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe