Ads Area

சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸோடு இணைகிறாரா சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீல்..??

சம்மாந்துறை அன்சார்.

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும், அக் கட்சியின் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சி.எம். சஹீல் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியில் விரைவில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் முகமாக சம்மாந்துறை24 இணையத்தளம் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தான் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியில் உள்ள சிலரது சதி நடவடிக்கைகள் காரணமாக தான் அதிர்ப்தியுற்ற நிலையில் உள்ளேன் அது தொடர்பாக எமது கட்சியின் கௌரவ தலைவர் அல்-ஹாஜ் ரிசாத் பதியுத்தீன் அவர்களிடமும் பேசியுள்ளேன் இருந்தும் கட்சியில் இருந்து விலகுவதாக இன்னும் எதுவித முடிவுகளும் எடுக்கவில்லை. சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து அழைப்புக்கள் வந்த போதும் முஸ்லிம் காங்ரஸில் கட்சியில் இணைவதற்கான  உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  


அவ்வாறு ஒரு நிலைவரின் என்னை ஆதரித்த மக்களை ஒண்றினைத்து அவர்களுடைய அபிலாஷைகளுக்கேற்ப ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க காத்திருக்கின்றேன். இணையவுள்ளதாக மற்றும் இணைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe