(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் கா.பொ. த உயர்தரம் (A/L ) எழுதிய பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டல் செயலமர்வு கல்முனை அல் -ஸுஹரா வித்தியாலயத்தில் (08) இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ.ஷிப்லி அஹமட் அவர்கள் கலந்து கொண்டு பாட நெறிகளை தெரிவு எவ்வாறு அமைத்துக்கொள்வது மற்றும் எவ்வாறு Online விண்ணப்பத்தை மேற்கொள்வது தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் அமைப்பின் அங்கத்தவர்ளும் கலந்து கொண்டனர்.