நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த மண்ணம்பந்தல் மூங்கில் தோட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், 35; கூலித்தொழிலாளி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாபநாசம் அடுத்த ராஜகிரியைச் சேர்ந்த பைரோஸ்பானு, 28, என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 2 வயதில், மகாலட்சுமி மற்றும் கமர்நிஷா என்ற, 2 மாத பெண் குழந்தையும் இருந்தது.
கணேசன், தன் குடும்பத்தினருடன், திருப்பாலத்துறையில், ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன், மயிலாடுதுறையில் உள்ள, தன் தாயை பார்க்க, கணேசன் சென்றார். 1ம் தேதி, பைரோஸ்பானு, போன் மூலம், கமர்நிஷா இறந்துவிட்டதாக, கணேசனிடம் கூறினார்.
இந்த மறுமணத்துக்கு, கமர்நிஷா இடையூறாக இருக்கும் என கருதி, 2 மாத குழந்தையை, பைரோஸ்பானு, அக்பர்அலி உட்பட, நான்கு பேர் சேர்ந்து, துணியால், குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தது, தெரிய வந்தது.இதையடுத்து, நான்கு பேரையும், பாபநாசம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.