(எம்.எம்.ஜபீர்)
மத்திய முகாம் 12ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் வருமானத்தினை இழந்த 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.ஹில்வான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.எம்.அஷாத், அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.