Ads Area

12ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையினால் வருமானத்தினை இழந்த 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.


(எம்.எம்.ஜபீர்)

மத்திய முகாம் 12ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் வருமானத்தினை இழந்த 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை தடுக்கும் நோக்கில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் சாளம்பைக்கேணி-03 கிராமத்தில் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு 1000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.ஹில்வான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.எம்.அஷாத், அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe