(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள மத்தியமுகாம் சாளம்பைக்கேணி நூறாணியா ஜூம்ஆ பள்ளிவாசலினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 220 குடும்பங்களுக்கு 1000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
சாளம்பைக்கேணி-03 நூறாணியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.அன்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.எம்.அஷாத், சாளம்பைக்கேணி-03 நூறாணியா ஜூம்ஆ பள்ளிவாசல் செயலாளர் ஏ.ஜே.எம்.ஹில்வான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.