தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் பல நகரங்களில் அமுலில் இருந்த 24 மணி நேர ஊரடங்குச் சட்டம் இன்று முதல் (2020-04-26) மக்கா நகரத்தைத் தவிர ஏனைய நகரங்களில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது, மக்காவில் தொடர்ந்தும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் அறிவிக்கப்படுவதாவது,
தற்போது பொதுமக்கள் தங்களது அத்தியாவசித் தேவைகளுக்காக காலை 9 மணி முதல் பகல் 5 மணி வரை எங்கும் வெளியில் செல்ல முடியும் எனவும், அவசிய வர்த்தக நிலையங்கள் மற்றும ்தனியார் நிறுவனங்கள் இயங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஊரடங்கு உத்தரவு தளர்வு இன்று (2020-04-26) முதல் எதிர்வரும் மே 13ம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.