கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த கத்தாரை முற்றாக முடக்கினால் என்ன நடக்கும்..?
கத்தாரில் கொரோனா தொற்று சம்பந்தமான அதிகரிப்பு எண்ணிக்கைகளை பார்க்கும்போது எல்லோருக்கும் தோன்றும் அல்லது கேட்கும் கேள்விகள் ;
ஏன் இதுவரை கத்தார் லாக் டவுன் செய்யவில்லை ?
ஒரு நாட்டை முற்றாக முடக்குவதென்பது இலேசுப்பட்ட விடயமில்லை அவ்வாறு செய்தாலும் பாதிக்கப்படுவோர் உண்மையில் வெளிநாட்டினராகிய நாங்கள்தான். ஏனெனில் எந்தவொரு நாடும் பிரச்சினை வரும்போது முன்னுரிமை கொடுப்பது அந்த நாட்டினரைத்தான் அதன் பிறகுதான் வெளிநாட்டவர்கள்.
உணவுக்கான பல பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளான இலங்கை இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முற்றாக முடக்காமல் ஊரடங்கு சட்டம் போட்டதற்கே பல பட்டினி சாவுகளும் இன்னும் எத்தனையோ குடும்பங்களில் சொல்லொண்ணா துயரங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது உணவுக்கான பொருள்களுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்கும் கத்தார் எவ்வாறு லாக் டவுன் செய்ய முடியும்? இது சாத்தியமா ? கத்தாரில் இருக்கும் செனயாவையே உதாரணமாக எடுக்கலாம் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு 100% வீதம் உணவு சென்றடைகின்றதா இல்லையே !! அங்கு இருப்பவர்களை பராமரிப்பது என்பது மிகப் பெரும் சவாலான விடயமாகும்.
எனவே அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த நாட்டின் வசிப்பவர்கள் என்ற வகையில் நாமும் நம்மளால் முடியுமான ஒத்துழைப்பை வழங்கி கொரோனா வைரஸ் இலிருந்து மீண்டு வருவோம்.
லாக் டவுன் செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் சமூக இடைவெளிகளை பின்பற்றி எப்போதும் கைகளை கழுவி சுத்தமாக இருப்போம்.
நன்றி - mgulf
சவுதி அரேபியாவில் தற்போது 24 மணி நேர ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவசித் தேவையின்றி யாரும் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.