கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்யும் சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வதிவிடங்களை பதிவு செய்து அவற்றை கான்பிக்கும்போது அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைச்சு நேற்று (27) திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன மேலும் குறிப்பிடுகையில்,
"இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாத்து மதிப்பளித்து செயற்படும் பட்சத்தில் அவர்கள் பரிசோதனைக்கு சுயமாக முன்வருவதை ஊக்கமளிப்பதாக அமையும்.
இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்தல் அல்லது ஒளிபரப்பு செய்வதானது கடமையில் ஈடுப்படும் சுகாதார அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையலாம்.