சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு.
Makkal Nanban Ansar19.5.20
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 16 ம் திகதி முதல் இம்மாதம் 31ம் திகதி வரையில் காலாவதியான மற்றும் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் தகிதி வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.