Ads Area

சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு நடை பயணம்... பசியால் உயிரிழந்த தொழிலாளி...!

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 144 ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் சாரைசாரையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தும் சைக்கிள் மார்க்கமாகவும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பயணிக்கும் வடமாநில  இளைஞர்களை தமிழக ஆந்திர எல்லையான பனங்காடு பகுதியில் ஆந்திர போலீசார் வரவிடாமல் தடுத்து நிறுத்தியும் தடியடி  நடத்தியும் அவர்களை தமிழகத்தை நோக்கி அனுப்பி வைக்கின்றனர்.


அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சென்னை போரூரில் இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து உணவில்லாமல் கவரப்பேட்டை  பஜார் பகுதியில் வந்துள்ளார். உடலின் சோர்வு காணமாக  கடை அருகே மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உணவு தண்ணீர் அளிப்பதற்காக எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் உடல் அசைவு ஏதும் இல்லாததால் அருகே இருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு பொதுமக்கள் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதை அறிந்த கவரைப்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராம் திவாஸ் என்பது தெரியவந்தது.மேலும் அவரிடம் இருந்த இந்த இரண்டு ஆதார் அட்டையில் மற்றொன்றில் சத்தியநாராயண பிஸ்வாஸ் என்றும் பெயர் இருந்தது அவர் உடல் நலக் குறைவாக இருந்ததாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பசியினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe