சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 16-வது ஆண்டாக 2 நாட்களுக்கு நோன்பு வைக்கிறார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். மேலும், பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தவாறு இந்தாண்டு நோன்பு வைக்கிறார். வழக்கமாக இவர் சென்னையில் இருந்தால் சஹர் (அதிகாலை உணவு), இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சிகள் களை கட்டும்.