பாறுக் ஷிஹான்.
கொள்ளை தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது.
கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில் ரூபா 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன.
இருந்த போதிலும் குறித்த உரிமையாளர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன் குறித்த களவு தொடர்பில் மறைக்காணோளி(சிசிடிவி) பதிவுகளை வழங்காது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டார்.
இவ்வாறு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டு உரிமையாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை(22) அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் குறித்த வீட்டில் உள்ள மறைக்காணொளிகளை(சிசிடிவி) பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.மேலும் குறித்த களவு தொடர்பில் மறைக்காணோளி(சிசிடிவி) பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு மன்றிற்கு அறிக்கையிடுமாறு பதில் நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.