Ads Area

சௌபாக்கியா பயிர் செய்கை திட்டத்திற்கு இலவசமாக சேதனப்பசளை.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளபடும் சௌபாக்கியா பயிர் செய்கை திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்திசெய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை  இலவசமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் பிரதேச செயலகத்தில் வைத்தி நேற்று கையளிக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின்  பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.மஜீட், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாறூக், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், நிர்வாக உத்தியோகத்தர்(கிராமசேவக) எம்.ரீ.தாஸீம், சமூக சேவைகள்  பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் மாஹிர் உள்ளிட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe