Ads Area

சவுதி அரேபியா ரியாத்திலிருந்து நேற்று 275 இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பு.

சவுதி அரேபியா ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகமானது வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து 06 ஜூலை 2020 அன்று 275 இலங்கையர்களை ரியாத் நகரிலிருந்து கொழும்பு நோக்கி மீள்திருப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. 

இவ்விஷேட விமானமானது கற்பினித் தாய்மார்கள், அவசரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய நோயாளிகள், மாணவர்கள், நாடுகடத்தல் முகாமில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் எமது தூதரகத்தில் பதிவு செய்திருந்த அண்மையில் தங்களது தொழில்களைத் துறந்த வயது முதிரந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஆகியோரை பயணிகளாகக் கொண்டிருந்தது. 

இந்த 275 பயணிகளும் சவூதி அரேபியாவின் ஜித்தா, தமாம், ஜுபைல், ஹாய்ல், அப்ஹா, அல்பஹா, யன்பூ, அல்ஜவ்ப், சகாகா மற்றும் அல்கப்ஜி ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது தூதரகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல் - இலங்கைத் துாதரகம்
றியாத் நகரம் - சவுதி அரேபியா.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe