Ads Area

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" சம்மாந்துறை பிரதேசத்தில் மீண்டும் வீடு திறந்து வைப்பு.

ஐ.எல்.எம் நாஸிம்   

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை  பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு கடந்த (4) வைபவ ரீதியாக சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளியின்  பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ்  வீடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  மானிய நிதியுதவியின் கீழ்   வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா  செலவில்  பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்ட  இவ் வீடு சம்மாந்துறை மல்வத்தை 01 கிராம சேவையாளர் பிரிவை  வதிவிடமாக  கொண்ட பயனாளிக்கு  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர வீடில்லாத, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில்  நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்,எம் ஆசிக்,
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க,கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழினுட்ப உத்தியோகத்தர்கள்  எம்.டி.எ றஹ்மான்,யு.எல்.எம் அபூபக்கர் மற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe